( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



Idocs Guide to HTML  வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை  கொடுக்க படுகிறது தொடர்புக்கு Cell No = +91-8110088846 - Idocs Guide to HTML


ஆசையை நிறைவேற்றும் அமிர்ததாரா !


    ள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப்தி கொள்ள பார்க்காது. இன்னும் வேண்டும் என்ற ஆசை, இது போதாது என்ற பேராசை கொண்ட மனிதர்கள் உலக வீதியில் நாலாபுறத்திலும் இருப்பதை நாமறிவோம். ஆயினும் அடிப்படை தேவைக்கு கூட வசதியும், வாய்ப்பும் இல்லாமல் அல்லாடும் ஜீவன்களை அன்றாடம் பார்க்கிறோம் லட்சக்கணக்கில்.

காரும், பங்களாவும் வேண்டுமென்று ஆசைப்படவில்லை. அந்த அப்பாவி ஜீவன்கள் பசிக்கும் பட்டினிக்கும் உணவும், உடம்பை மறைக்க ஆடையும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. வாழ்வதற்கு திண்ணை கூட இல்லாமல், பல்லாயிரம் பேர்கள் தவிக்கும் போது ஒரு மனிதனுக்கு ஒன்பது வீடுகள் இருக்கிறது. இது சமுதாயத்தின் சீர்கேடா? இயற்கையின் சாபமா? ஆண்டவனின் திருவிளையாடலா?



 வாங்குவது ஒற்றை சம்பளம், பசியாற வேண்டியதோ ஏழு வயிறுகள். இதில் அன்றாடத்தேவையை எப்படி பூர்த்தி செய்வது? பிச்சைக்காரனை போல் தெருவிலே வாழவும் முடியவில்லை. பணக்காரனை போல் குளிரூட்டப்பட்ட அறையினில் உறங்கவும் முடியவில்லை. இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் நடுத்தர உயிர்களும், இந்த பூமியில் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன.

பசித்தவன் சோறு வாங்க பணம் கேட்கிறான். நடுத்திர மனிதனும் நல்லவண்ணம் வாழ பணம் கேட்கிறான். பணக்கார வர்க்கத்தில் இருப்பவன் கூட இன்னும் வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்று பணம் கேட்கிறான். எவருமே பணத்தை வேண்டாம் என்று ஒதுக்குவார் இல்லை. உலகே மாயை, வாழ்வே மாயை என்று சந்நியாசம் சென்றவனுக்கு கூட வழிபாடு நடத்த இந்த காலத்தில் பணம் தேவைப்படுகிறது.

உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு உருண்டாலும், ஓட்டுவது தான் ஒட்டுமென்று அறிவுக்கு தெரியும். ஆனால் ஆசை, அறிவை வேலை செய்ய விடுவது இல்லை. எந்த வகையிலாவது பணத்தை தேடு என்று சரீரம் என்ற குதிரையை சாட்டையால் சொடுக்கிய வண்ணமே இருக்கிறது. மனிதன் அறிவைத்தேடி ஓடுகிறானோ இல்லையோ அன்பைத்தேடி அலைகிறானோ இல்லையோ பணத்தை தேடி நித்த நித்தம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறான். ஓயாமல் உழைக்கிறான், உறங்காமல் பாடுபடுகிறான். ஆனாலும் அவன் கைகளில் தேவைக்கான செல்வம் கிடைக்கவில்லை.


இந்த நிலையிலிருந்து தப்பிக்க அதிர்ஷ்டப்படி பெயரை மாற்றிக்கொண்டால், நல்லது நடக்குமா? அதிர்ஷ்ட கற்களை அணிந்தால் சுகம் கிடைக்குமா? அஞ்சனங்கள், யாகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் செய்தால் நிலைமையில் கொஞ்சமேனும் மாறுதல் ஏற்படுமா? என்று துடியாக துடிக்கிறான். இவைகள் சில நேரங்களில் பலன்களை துல்லியமாக தருகிறது. பல நேரங்களில், பண செலவாகவே முடிகிறது. இதனால் சம்மந்த பட்டவனின் மனம் தள்ளாடுகிறது. சாஸ்திரம் என்பதும், பரிகாரம் என்பதும் பயனற்ற செயலா? அதில் பயன் இல்லையா? என்ற சந்தேக மேகம் கருமையாகி மின்னலாக வெட்டி இடியாகவும் இடிக்கிறது.

இவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். பெயரை மாற்றுவதும், நவரத்தினங்கள் அணிவதும், பரிகார பூஜைகள் நடத்துவதும் நமது முன்னோர்கள் சொன்ன வழிகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகள் சக்தி வாய்ந்தவைகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவைகள் அனைத்துமே நமக்காக, நமது முன்னேற்றத்திற்காக, வெளியில் செய்யப்படும் ஏற்பாடுகள், புறக்கருவிகள். அவைகளில் சக்தி அலைகள் நமது உடம்பிற்குள் சரியான கோணத்தில் புகுந்தால் மட்டுமே பயனைத்தரும். உட்புகவில்லை என்றால் எதிர்பார்த்தது கிடைக்காது.

எனவே நமது எண்ணங்கள் நிறைவேறுவதற்கு புறக்காரணங்களை மட்டுமே மேற்கொள்ளாமல், வேறு சில அகக்காரியங்கள் இருக்கிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். காரணம் நமது சாஸ்திரங்களும், வேத நூல்களும் நமக்கு தேவையான அனைத்தும் நமக்குள்ளேயே மறைந்திருப்பதாக சொல்கின்றன. அந்த சக்திகளை கண்டுபிடித்து, உசுப்பி விட்டால் நடக்காததும் நடக்கும். நடக்கவே முடியாததும், முடியாது என்று ஓரங்கட்டபட்டவைகளும் நடக்கும் நடந்தே தீரும் அது எப்படி?


மனித உடம்பு இருக்கிறதே இது ஒரு அற்புதமான பொக்கிஷம். இந்த பொக்கிஷத்திற்குள் விலைமதிக்க முடியாத புதையல்கள் பல இருக்கிறது. அதில் சில மனித கண்ணுக்கும், விஞ்ஞான அறிவிற்கும் தெரியும். பல புலன்களால் உணரமுடியாதவைகள். காட்சிக்கும், கருத்துக்கும் வரமுடியாதவைகள். ஆனால் சத்தியமான சாஸ்வதங்கள். கண்ணுக்கு புலப்படாத இந்த மர்ம உறுப்புகளில் தான் பிரபஞ்ச ரகசியம் பொதிந்து கிடக்கிறது. அதனால், தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று நமது பெரியவர்கள் கூறினார்கள்.

பிரபஞ்ச வெளியில் சில மந்திர ஓசைகள் மிதந்து கொண்டிருக்கின்றன அவைகளை ஈர்க்கும் ஆற்றல் நமது உடம்பிற்கு உள்ளே மறைந்து இருக்கிறது. அந்த ஆற்றல் விழிப்போடு செயல்பட நாம் சில ஓசைகளை, மெளனமாக குறிப்பிட்ட ரிதத்தில் ஏற்படுத்த வேண்டும். அந்த ரித அதிர்வுகள் நமது சக்தி மையங்களை பிரபஞ்ச ஓசைகளோடு ஒருங்கிணைத்து விடும். அப்போது இறைவனின் ஆற்றல் நமக்குள் பெருக்கெடுத்து ஓடும். அந்த நேரம் நாம் விரும்புவது அனைத்தும் கிடைக்கும். நமக்கு தேவையானது எல்லாமே நம்மை தேடி வரும்.

மெளனமான ரிதங்கள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? அதன் பெயர் என்ன? என்ற ஆர்வம் எல்லோருக்குமே ஏற்படும். அதன் பெயர் நாம் அனைவரும் அன்றாடம் அறிந்த பெயர் தான். தினசரி பயன்படுத்தும் பெயரே தான் சந்தேகமே இல்லை. நம்புகிறவர்களும், நம்பாதவர்களும் திரும்ப திரும்ப சொல்லும் மந்திரம் என்பதே அந்த பெயர். மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். மந்திரம் சொல்லி தியானம் செய்யலாம். மந்திரம் சொல்லி மாயாஜால வேலை கூட செய்யலாம். மந்திரம் சொன்னால் செல்வம் கிடைக்குமா? மந்திரம் பணத்தை அடைவதற்கு உதவுமா? அப்படி ஒரு மந்திரம் இருக்கிறதா? அது என்ன மந்திரம்? என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. ஆம், செல்வத்தை தரும் மந்திரம் இருக்கிறது அதன் பெயர்.

    அமிர்த தாரா மந்திரம்   

சிலருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு அவநம்பிக்கை வரும். சிலர் இது எதோ ஏமாற்று வித்தை என்றும் நினைக்கத்தோன்றும். யார் எப்படி நினைத்தாலும் இது சத்தியம். இது உண்மை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு ஆழமான பள்ளத்தில் கிடந்தாலும், உங்களை தூக்கி நிமிர்த்தி சமுதாயம் என்ற கோபுரத்தின் மேலே, உங்களை உட்கார வைக்கும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. இதை நம்பி கெட்டவர்களை விட, நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம். இவ்வளவு உறுதியாக இந்த விஷயத்தை நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது. முதலில் மந்திரம் என்றால் என்ன? அது நம்மை எப்படி வழிநடத்தும் என்ற தொழில்நுட்பதை நீங்கள் புரிந்து கொண்டால் அந்த காரணம் உங்களுக்கே தெளிவாகி விடும்.

இயற்கை சக்திகளின் அதிபதிகள் தேவதைகள். மந்திரங்கள் என்பது தேவதைகளின் உருவமாகும். அதாவது உண்மையில் தேவதைகள் என்பதே மந்திரங்கள் தான். கடவுளும், தேவதைகளும் இரண்டு வடிவாக இருப்பதாக நமது ஞானிகள் கூறுகிறார்கள். ஒன்று ஒளி வடிவம். இன்னொன்று ஒலி வடிவம். ஒருவகையில் இரண்டுமே ஒன்றுதான். வெளிச்சம் சத்தமாக வருகிறது எனலாம். மந்திரங்கள் என்பதும் சத்தமாக இருக்கின்ற தேவதைகளே. குறிப்பிட்ட தேவதை, குறிப்பிட்ட வரத்தை கொடுப்பது போன்று குறிப்பிட்ட மந்திரம் குறிப்பிட்ட பலனை தருகிறது.

மந்திரங்கள் என்பது ஓசைகளின் கூட்டமைப்பு. ஓசைகள் இல்லாமல், உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. உடலும் இல்லை. இந்த உலகில் காணப்படும் அனைத்துமே ஓசையிலிருந்து தான் வந்ததாகும். கிறிஸ்தவ மதமும் கூட, இதை ஒத்துக்கொள்கிறது. விவிலியம் முதலாம் அதிகாரத்தில், ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது என்று வருகிறது. இதைதான் இந்து மதம் விவிலிய காலத்து முன்பே நாத விந்து என்றது. இறைவனை வேத மந்திர சொரூபன் என்றது.

ஓசைகள் ஒன்று என்றாலும், சமுத்திரத்தில் பல துளிகள் சேர்ந்து ஒரு பேரலையை உற்பத்தி செய்வது போல, ஓசையிலும் பல சிறிய ஓசைகள் உண்டு. அவைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். நேற்று பிறந்த, இன்று பிறந்திருக்கிற, நாளை பிறக்கப்போகிற அனைத்து மனிதர்களுக்குமே தனித்தனியான பிரத்தியேகமான ஓசைகள் இருக்கின்றன. இப்படி நான் மட்டும் கூறவில்லை. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. வாடகை வீடுகள் ஆயிரம் இருந்தாலும், நமக்கென்று உள்ள சொந்த குடிசையில் கிடைக்கின்ற சுதந்திரமும் சுகமும் வேறு எதிலும் கிடைக்காது அல்லவா? அதைப்போல ஆயிரம் மந்திரங்கள் இருந்தாலும், நமக்கென்று தனியாக இருக்கும் மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொன்னால் தான் நமது சொந்த தேவைகள் பூர்த்தியாகும்.

இந்த ஆடை எனக்கு பொருத்தமானது என்று தேர்ந்தெடுக்க முடியும். இந்த கார் எனக்கு பிடித்திருக்கிறது என்று தீர்மானத்திற்கு வரமுடியும். இந்த தண்ணீரில் தான் குளிப்பேன் என்று கூட முடிவு செய்து விட முடியும். காரணம் இவைகள் அனைத்துமே வெளியில் இருப்பது. கண்ணுக்கு தெரிவது. பத்து பேருக்கு அறிமுகமானது. மந்திரம் என்பது அப்படி இல்லையே கண்ணுக்கும், காட்சிக்கும் புலப்படாத சூட்சமம். அது சாதாரண மந்திரத்தையே அடையாளம் காணுவது மகாசிரமம். எனக்கென்று உரியதை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? என்று பலரின் நெஞ்சம் குழம்பும்.

இந்த உலகில் பலகோடி மனிதர்கள் இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி சுபாவங்கள் இருக்கலாம். விந்தையான பழக்கங்கள், விசித்தரமான சூழ்நிலைகள் எண்ணிப்பார்க்க முடியாத எண்ணங்களின் அதிர்வலைகள் என்று ஆயிரம் இருந்தாலும், அனைத்து மனிதர்களுமே மூன்று குணங்களுக்குள் அடங்கி விடுவதாக நமது வேதங்கள் சொல்கிறது. வேதங்கள் சொல்வதை பல்லாயிர ஆண்டுகள் காலதாமதம் செய்து விஞ்ஞானமும் இப்போது ஒத்துக்கொள்கிறது. உறுதியோடு இருக்கும் சத்வம், ஓடிக்கொண்டே இருக்கும் ராஜசம், ஒரே இடத்தில் இருக்கும் தாமசம் இவைகள் தான் அந்த மூன்று குணங்கள். இந்த மூன்று குணத்தில் மங்கோலியன், ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என்று மனித குலங்கள் அனைத்துமே அடங்கி விடுகிறது.

ராஜசம், தாமசம், சத்வசம் ஆகிய மூன்று குணங்களும் தனித்தனியாகவோ ஒருங்கினைந்தோ செயல்படுவது கிடையாது. ராஜசத்திற்குள் சத்வசமும், சத்வசத்திற்குள் தாமசமும் கலக்கின்றன. அப்படி கலக்கும் போது, விகிதாசாரங்கள் மாறுபட்டு, பல்லாயிரக்கணக்கான குணங்களாக சுபாவங்களாக உருவெடுக்கின்றன. அப்படி பலகோடி குணங்கள் உருவானாலும், அவற்றின் வேர்களாக இருப்பது முக்குணங்களே ஆகும்.

மனித குணங்கள் மூன்று என்று தரம்பிரித்த நமது முன்னோர்கள், மனிதனின் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்யும் மந்திரங்களையும் மூன்று பகுதிகளாக பிரித்தார்கள். புலன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றோடு ஒன்று கலந்து பல்வேறுபட்ட கலவைகள் இருப்பது போலவே மந்திரங்களுக்கும், லட்சக்கணக்கான கலவைகள் உண்டு. அந்த கலவைகளின் சூத்திரத்தை கற்றவர்களுக்கு இன்னாருக்கு இந்த மந்திரம் சொந்தமானது என்று முடிவுக்கு வந்து விட முடியும். இந்த இடத்தில் தான் மந்திர சாஸ்திரம் பயில்வதற்கு குரு ஒருவரின் ஒத்தாசை அவசியமாகிறது.


குரு என்பவர், மந்திரத்தின் சூட்சமம் அறிந்தவர், ஒவ்வொரு மந்திரத்தின் அதிர்வும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, அவரது அனுபவத்தில் தெரியும். சிலர் ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும், குருவானவர்களும் மந்திரத்தை உருவாக்கியவர்கள். ஒரு கவிதையை போல, காவியத்தை போல தங்களது புலமையினால் மந்திர சாஸ்திரத்தை உண்டாக்கியவர்கள் என்று நினைக்கிறார்கள் இது முற்றிலும் தவறு. மந்திரம் நாற்காலி அல்ல உருவாக்குவதற்கு. அது கிணறும் அல்ல பத்துபேரின் கூட்டு முயற்சியால் தோண்டுவதற்கு. அது தானாக தோன்றிய சுயம்பு. எப்போதுமே பிரபஞ்ச வெளியில் இருந்து கொண்டே இருக்கும். சாஸ்வதம் ரிஷிகளும், ஞானிகளும் அந்த சாஸ்வதத்தை காதுகளால் மட்டும் கேட்கவில்லை. கண்களாலும் பார்த்தார்கள். அதனால் தான், அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா என்று பெயர். அதாவது அவர்கள் மந்திரங்களை நேருக்கு நேராக நமக்கு பார்த்து சொன்னவர்கள். அந்த மந்திரங்கள் ஏடுகளில் எழுதப்பட்டது மிகவும் சொற்பம். குரு பரம்பரை வழியாக வாழையடி வாழை என வந்து கொண்டு இருப்பதே அதாவது எழுதப்படாத மந்திரங்களே மிக அதிகம்.

பரம்பரையாக குரு உபதேசம் பெற்று வருகின்ற குருமார்கள், இந்த மந்திரர்களை இன்னாருக்கு இன்னது என்று அடையாளம் கண்டு கொடுப்பதில் வல்லவர்கள். அவர்களுக்கு மட்டும் அந்த திறன் எப்படி கிடைக்கிறது? என்று யோசிப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மனிதனும் மூன்று வகையான உடம்பை பெற்றிருக்கிறான் ஒன்று உணவுகளால் ஆன சரீரம். இரண்டாவது உணர்வுகளால் ஆன மனது. மூன்றாவது அதிர்வுகளால் ஆன வெளிச்சம். இப்படி சொல்வது சற்று குழம்பலாம். மூன்றாவது சொல்லப்பட்ட விஷயம் என்னவென்று தெரியாமல் தடுமாறலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடம்பை சுற்றி இயற்கை ஒரு ஒளிவட்டத்தை கொடுத்திருக்கிறது. அது வெண்மை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் என்று பலவகை வண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் குறிப்பிட்ட அந்த மனிதனின் எண்ணங்களை, ஆத்மாவின் தன்மையை அடையாளப்படுத்துவது ஆகும். உதாரணமாக ஊதா நிறத்தில், ஒருவனை சுற்றி ஒளிவட்டம் இருந்தால் அவன் கடினமான சித்தம் கொண்டவனாக இருப்பான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிவட்டம் இருந்தால் அவன் மலர்ச்சியானவனாக இருப்பான். இந்த வட்டத்தை என்னவென்று பார்க்கும் ஆற்றல் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நிறைந்த ஒருசில மனிதருக்கும் உண்டு.

எனது வாழ்வின் அனுபவத்தில் நான், அன்று முதல் இன்றுவரை அதாவது எனக்கு விபரம் தெரியாத காலம் துவங்கி இன்றுவரை எனக்குள் இருக்கும் ஒரு தன்மை என்னவென்றால் ஒருமனிதனை நேருக்கு நேராக நான் பார்க்கும் போது அவனது எண்ண அதிர்வுகள், சில வண்ண நிறங்களாக வெளிப்படுவதை உணர்வேன். இப்போது எனது அனுபவமும், எனது பயிற்சியும் அந்த வண்ணம் என்பது மனிதனை சுற்றி இருக்கும் ஆரா என்பதை நன்றாக அறிய வைக்கிறது. இந்த ஆராவை உன்னிப்பாக கவனித்தால், ஒருவன் ராஜசகுனம் கொண்டவனா, சத்வசத்தின் வசம் இருப்பவனா, தாமசமானவனா என்பதை சுலபமாக கணித்து விட முடியும். இப்படி கணிக்கும் ஆற்றலும், மந்திர சாஸ்திர தேர்ச்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாக உள்ள மந்திரங்கள் இதுவென்று அறிந்து கொள்ளலாம்.

நான்கு வேதங்களில் கூறப்படுகிற அனைத்து வார்த்தைகளுமே மந்திரங்கள் தான். வேதங்களில் உள்ள வார்த்தைகளுக்கு பொருளை தேடுவதை விட, அதன் வார்த்தை ஒலிகளில் மறைந்து கிடக்கும் சக்தியை தேடுவது தான் புத்தி உள்ளவர்களுக்கு அழகு என்று பெரியவர்கள் கூறுவார்கள். வேத மந்திரங்கள் தவிர பல ரிஷிகள் தங்களது தவ வலிமையால் கண்டறிந்த மந்திரங்கள் நிறைய உண்டு. அவைகளை கொண்டு தான் மந்திர சாஸ்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்திரம் தேவதா மந்திரம், பாராயண மந்திரம், பீஜ மந்திரம் என்ற மூன்றுவகை இருக்கிறது.

தேவதா மந்திரம் என்பது சில வரிகளை கொண்டதாகும். இதற்கு உதாரணமாக காயத்திரி மந்திரம், மஹா மந்திரம் போன்றவைகளை சொல்லலாம். பாராயண மந்திரம் என்பது நீண்ட பல சொற்றொடர்களை கொண்டதாகும். ருத்ரம், விஷ்ணு சகஸ்ராநாமம், ஸ்ரீ சூக்தம் போன்றவைகள உதாரணமாக காட்டலாம். பீஜ மந்திரங்கள் என்பது இரண்டு அல்லது மூன்று எழுத்தில் முடிந்து விடும் சக்தி மிகுந்த ஒசைகளாகும். இந்த ஓசைகள் இல்லாமல் உலகம் இல்லை. இந்த ஓசைகளுக்குள் தான் நமக்கு வரம் தரும் சக்தி மறைந்து கிடக்கிறது. நமக்கான பீஜ மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று மீண்டும் மீண்டும் அந்த மந்திரத்தை நாம் சொல்கிற போது, அந்த மந்திர அதிர்வு நமது உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் சக்தி மையங்களை விழிப்படையச்செய்கிறது. அப்படி விழிப்படைந்த சக்தி மையங்கள் பீஜ மந்திரங்களின் அதிர்வுகளோடு கலக்கும் போது பிரபஞ்ச ஆற்றலை மிக சுலபமாக ஈர்க்கிறது அதன் பிறகு நாம் நினைத்தது நடக்கிறது.

மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஞானிகளாக இருப்பவர்கள், சாதாரண மனிதர்கள் முக்தி அடைவதற்கு வழிகாட்ட வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு செல்வத்தை பெறவும், இகவுலக வாழ்வில் சுகத்தை பெறவும், மந்திரங்களை வகைப்படுத்தி வைத்திருப்பது சரியான தர்மம் தானா? என்று சிலர் யோசிக்க கூடும். அவர்கள் ஆதிகால மனிதன் பசிக்காக ஓடி ஆடி வேட்டையாடிய காலத்தில் பெரிய அளவில் சிந்திக்கவில்லை. வேளாண்மையில் புகுந்து பசியாறிய பிறகே தனது சிந்தனையை கூர்மைப்படுத்தினான் என்பதை அறிய வேண்டும். அதாவது மனிதனுக்கு லெளகீக தேவைகள் முடிந்த பிறகே பரமார்த்திக தேவைகளை பற்றி யோசிப்பான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

உப்புக்கும், சீனிக்கும், செப்பு காசுக்கும் அலைந்து  கொண்டிருந்தால் ஆத்திகன் கூட நாத்திகன் ஆகிவிடுவான் என்பது மகாகவி பாரதியின் சக்திய வாக்கு. அதனால் தான் இறைவனை கண்ணார காண்பதற்கு மந்திர ஜெபங்களை உருவாக்கிய நமது முன்னோர்களே, செல்வங்களை பெறுவதற்கும் மந்திர ஜெபங்களை உருவாக்கினார்கள். இன்றைய மனிதர்களுக்கு தேவைகள் அதிகம் இருக்கிறது. தவிர்க்க முடியாத கடமைகளும் அதிகம் இருக்கிறது. இதனால் பணம் என்பதை தேடி அலைய வேண்டிய பரிதாபகரமான சூழலும் இருக்கிறது. இந்த பெரிய பாதாளத்தை தாண்டி வெளியில் வந்தால் தான், அவர்கள் இறைவன் என்ற மகாசமுத்திரத்தை உணர முடியும். எனவே அவர்களை வறுமைக்கடலை தாண்டவைக்க வேண்டிய கடமை நமக்குண்டு. சுவாமி விவேகனந்தர் கூட, பசித்தவன் முன்னால் வேதம் படிக்காதே! சாதம் படை என்று சொன்னார் அதனால் தான் நானறிந்த மந்திர சாஸ்திரத்தை இதுவரை பலருக்கும் கொடுத்து அவர்கள் கடலை கடக்க துணையாக நின்றிருக்கிறேன்.

நிறைய அனுபவங்களை என்னால் கூற இயலும். ஆனால் அத்தனைக்கும் இங்கே இடம் போதாது. மந்திரம், தந்திரம் இவைகள் எல்லாம் இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் என்று மிக ஆழமான முறையில் பிரச்சாரம் செய்து வரும் பெந்தகொஸ்தே சபையை சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு உண்டு. அவர் எந்த அளவிற்கு கர்த்தரின் மீது பக்தி வைத்திருந்தாரோ, அதே அளவிற்கு கர்த்தர் அவர்மீது அன்பு வைத்து, அவரை சோதித்து பார்க்க வறுமையை கொடுத்திருந்தார். அவரிடம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை கொடுத்து, இது உங்களுக்கான மந்திரம் சொல்லி பாருங்கள். உங்கள் வறுமை தீரும். மந்திரம் என்பது மதம் சார்ந்தது அல்ல, அது ஒரு ஆன்மீக விஞ்ஞானம். எனவே எனக்காக சொல்லுங்கள் என்றேன். அவர் என் மீது கொண்ட மரியாதையால் அரை மனதோடு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டபிறகு சொல்லி வந்தார். நாளடைவில் அவரது வறுமை மறைந்தது. இன்று பாளையங்கோட்டையில் சொந்த வீடு, மனைவி, மக்கள், தொழில் என்று நலமோடு வாழ்கிறார்.

இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால், மந்திரங்களை நம்பிக்கை இல்லாமல் சொன்னால் கூட அது பலன் தரும். நிச்சயம் கைவிடாது. அதே நேரம் மந்திரங்கள் இந்துக்களுக்கும், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மட்டுமே சொந்தமானது அல்ல என்பதற்காகவே மந்திரம் காற்றை போல, நீரை போல, ஆகாயத்தை போல எல்லோருக்கும் பொதுவானது. மந்திரம் என்ற நதி, தாகத்தோடு தன்னிடம் வரும் அனைவருக்கும் பரிவு காட்ட தயாராக இருக்கிறது. நாம் அந்த நதியை நோக்கி நடந்து செல்ல தயங்கி கொண்டிருக்கிறோம். நமது தயக்கத்தையும், மயக்கத்தையும் தூக்கி தூர வைத்து விட்டு மந்திர நதியில் குளிக்க முற்படவேண்டும்.

நான் இப்போது சொல்லிவருகிற மந்திரம் பணத்தை மட்டும் தான் கொடுக்கும் என்று தவறாக நினைக்கவேண்டாம். நமது வாழ்வில், நமக்கென்று ஏற்பட்ட துயரங்கள் அனைத்தையுமே தடுத்து ஆனந்தலகரியை மட்டுமே கொடுக்கின்ற அதிசய அட்சயபாத்திரம் இந்த மந்திரமாகும். நோய்கள் உனது தொல்லையா? அதை இந்த மந்திரம் தீர்க்கும். இல்லற வாழ்க்கை அமையவில்லையே? என்ற வருத்தமா அதையும் இந்த மந்திரம் கொடுக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இணங்குவதில் சங்கடமா? அதையும் இந்த மந்திரம் தீர்க்கும். மழலை செல்வம் இல்லையே? என்ற வருத்தம் இருப்பவர்களுக்கு கூட மருந்தாக இந்த மந்திரம் அமையும். சுருக்கமாக சொல்வது என்றால், உங்களுக்கு வரும் எல்லாவிதமான சந்தோஷ கேடுகளையும் இந்த மந்திரம் எதிர்த்து போராடி உங்கள் இதயத்தில் அமைதி பூங்காற்று வீசச்செய்து அங்கே இறைவனை குடியேற்றி விடும்.

தாகம் தீர்க்கும் நதி எதிரே வருகிறது. குளிர்ச்சியை தரும் தென்றல் உங்கள் வீட்டு வாசலில் வீசுகிறது. வாசனை நிறைந்த மல்லிகை பூ உங்கள் பந்தலில் படர்ந்திருக்கிறது. சந்தன குழம்பை வாரி இறைக்கும் வண்ண நிலவு நீலவானில் பவனி வருகிறது. நீங்கள் மட்டும் ஏன் கதவை சாற்றி நாலு சுவற்றிற்குள் உங்களை சிறைப்படுத்தி கொள்ள வேண்டும். உங்களது விடுதலைக்கு உத்திரவாதம் அளிக்க, உங்கள் சுகங்களுக்கு சரியான மேடை அமைத்து தர, இதோ நமது யோகிகள் தந்த மந்திரம் என்ற அமுதகலசம் இருக்கிறது. உங்களுக்கு பரிமாற நான் குருமார்களிடம் கற்ற மந்திர விருந்தை உங்களுக்கு படைக்க தயாராக இருக்கிறேன். பகிரங்கமாக இருகரம் நீட்டி உங்களை வரவேற்கிறேன். வாருங்கள் துயரங்களை வெல்வோம்...


மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


தொலைபேசி எண் :-




அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்:

  • செல்வமும், செல்வாக்கும் பெருகும்.
  • வியாபாரம் அபிவிருதியாகி, கோடிஸ்வர யோகம் தரும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • கணவன்-மனைவி சிக்கல்கள் தீரும்.
  • நல்ல திருமண வாழ்க்கை உடனடியாக அமையும்.
  • குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
  • குழந்தைகள் வளர்ச்சி காண்பார்கள்.
  • கல்வி தடையில்லாமல் வளரும்.
  • வேலை கிடைக்கும். அயல்நாட்டு யோகம் வரும்.
  • நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
  • செவ்வாய் தோஷம் தீர்வுக்கு வரும்.
  • சனி மற்றும் ராகு-கேது தோஷம் தீரும்.
  • நீண்ட நாள் நோய்கள் விலகும்.
  • தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
  • தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்.

யட்சனி தேவதைகளோடு பேசுவது எப்படி?


   ந்தவிதமான ஜாதகக்குறிப்புகளும்வேறு எந்த வகை உபகரணங்களும் இல்லாமல் சில ஜோதிடர்கள் நாம் போய் எதிரே அமர்ந்தவுடனேநமது பிரச்சனை என்னஎதற்காக அவர்களை நாடி வந்திருக்கிறோம் அது தீருமாதீராதாஎன்று கூறத்துவங்கி விடுகிறார்கள். இது அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டால் யட்சனிகளை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் கேட்கும் தகவலை காதுகளில் சொல்கிறது என்றும் பலர் சொல்கிறார்கள். அது எப்படி சொல்கிறது என்று பின்னர் விளக்குங்கள். இப்போது யட்சனி என்றால் என்னஎன்று கூறுங்கள். 
        லையாளத்தில் பேய்களையட்ச சக்திகள் என்ற பொருள்பட யட்சியட்சன் என்று அழைப்பார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிசாசுகளை அப்படி அழைப்பது தான் வழக்கம். ஆனால் யட்சனிகளுக்கும்பேய்களுக்கும் சம்பந்தமே கிடையாது. கடவுளின் படைப்பில் மிருகங்கள்பறவைகள்மனிதர்கள் என்று பல்வேறுபட்ட இனவகைகள் இருப்பது போலயட்சனி என்பதும் ஒருவகை உயிரினம். சில உயிர்கள் கண்களுக்கு தெரியும். சில உயிர்கள் தெரியாது. கண்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்பதனால் அவைகள் இல்லையென்றாகிவிடாது.

தேவர்கள்கந்தர்வர்கள்அசுரர்கள் என்ற வார்த்தைகளை பல முறை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். அவர்களும் மனிதர்களை போன்ற ஒரு இனமே. மனிதர்களை கண்களால் பார்க்கலாம்இவர்களை பார்க்க முடியாது. சாஸ்திரங்கள் இவர்களுக்கு சூட்சம தேகிகள் என்ற பெயரை கொடுக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத உடம்பு படைத்தவர்கள் என்பது இதன் பொருளாகும். யட்சனிகள் என்பதும் இந்த வகையை சேர்ந்ததே ஆகும். நாம் வாழுகிற இந்த உலகிற்குள்ளேயே நமது கண்ணுக்கு புலப்படாத இன்னொரு மாய உலகம் இருக்கிறது. அந்த மாய உலகில் வாழ்பவர்களே யட்சினிகள்.

நீங்கள் கூறுவது மாயஜால திரைப்படங்கள் போன்று அதீத கற்பனையாக தெரிகிறது. நாம் வாழுகிற இந்த உலகத்தில் இன்னொரு உலகமும் இருக்கிறது. என்றால் அதை எப்படி நம்ப முடியும்?

நம்புவது மிகவும் கடினம் தான். காரணம் மனிதர்களாகிய நாம்நமது அறிவு எத்தனை தூரம் செல்கிறதோ அத்தனை தூரத்தில் உள்ளவைகளையே உண்மை என்று நம்புகிறோம். அதற்கு அப்பால் உள்ளது நமக்கு தெரியாது என்பதனால்அதை பற்றிய அறிவு நமக்கு கிடையாது என்பதனாலும்அதை இல்லை என்றே மறுத்துவிடுகிறோம். ஆனால் சில காரிய காரணங்களை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உலகம் என்பது இருக்கலாம் என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

நமது கண்களால் பார்க்க கூடிய வெளிச்சம் ஒரு எல்லைக்கு உட்பட்டதே அந்த எல்லையை மீறிய அதீத வெளிச்சத்தையோ அல்லது மிக குறைவான வெளிச்சத்தையோ நம்மால் பார்க்க முடியாது. ஒலி அலைகளையையும்ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் நமது காதுகளால் கேட்க முடியும். மிகவும் சத்தமான் ஒலிசன்னமான ஒலி இவைகளை கேட்க முடியாது. அதற்காக இந்த ஒளியும் - ஒலியும் இல்லை என்று ஆகிவிடுமாயட்சனிகள்கந்தர்வர்கள் போன்ற மாய சக்திகள் மிக அதீதமான வெளிச்சத்தை போன்றவர்கள். அதனால் தான் நமது சாதாரண கண்களால் அவர்களை பார்க்க முடியவில்லை.

வானத்தில் அனைத்து இடத்திலும் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் பரவி கிடக்கிறது நாம் அதற்கான சரியான் சமிக்ஞையை (signal) நம் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் கொண்டு வரும் போது படங்களை காண முடிகிறது. அதே போல நமது மூளையையும்மாயா உலக அலைவரிசைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தால் அந்த உலகத்தின் இயக்கத்தை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நமது அறிவுஜீவித்தனம் அவைகளை நம்ப மறுக்கிறது.

யட்சனிகள் ஒருவகை இனம் என்று கூறுகிறீர்கள். ஆனால் யட்சனிகளை பற்றி அறிந்தவர்கள் அவைகள் அறுபத்து நான்கு என்று சொல்கிறார்கள். அவைகள் ஒரு இனம் என்றால் கடவுளால் படைக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையே இவ்வளவு தானாஅவர்களில் ஜனன மரணம் என்பது கிடையாதா?

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் வானத்தில் வெறும் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மட்டும் தானா இருக்கிறதுஎண்ணிக்கையில் அடங்காத கோடான கோடி நட்சத்திரங்கள் அல்லவா இருக்கின்றன. இருபத்தி ஏழு என்பது தனிப்பட்ட நட்சத்திரத்தின் எண்ணிக்கை அல்ல. அது ஒரு மண்டலம் அல்லது பிரிவு. பரந்து விரிந்த வான்வெளியில் இருபத்தி ஏழு மண்டலங்களாக நட்சத்திர பிரிவுகள் இருக்கின்றன என்பது இதன் பொருளாகும். அதே போன்று தான் அறுபத்தி நான்கு யட்சனிகளின் வகையாகும்.

கர்ண யட்சனிகர்ண பிசாசினி என்று தொடங்கி சாமூண்டாஹம்சாசோபனாவாஷாசித்திஜிக்வாலா மகா குபேரிசர்வ காரியாஅசுப காரியாதனதாரத்த கம்பளாராஜ்யபிரதாசர்வவித்யாஜெயாபோகாபத்மாவதிபிரதாமதனாவிஷாலா,விப்ரமாவடாக்னிபண்டாராபத்மினிவிசித்திரா, காலகர்ணிகாசந்திரவாடாஜெயா அர்க்கஷீரார்ணவாராஜ்யதாஅபமார்க்சந்த்ராமுர்தஉத்திஷ்டமகாமாயாவரிசாதனாஇத்யாகாமாதங்கிகடலேகுமாரிசாதனவித்யாபூதலோஷனாம் ஜலபாணிசர்வாங்க சுலோட்சனாராஜ்யதாஅங்கோலாதாத்ரிகுண்டிதாத்ரி உதும்பரகரிதாத்ரிபில்வதனதாயிபுத்ரதாரதிபிரியாசிஞ்சிஜலவாஷ்ணிகணவதிசந்திரிகாஅனுராகினிசொர்ணரேகாமகாநந்தாசூரசுந்தரிஅணிலாசண்டவேகாமஹாபயாகுஷமந்தாகினி என்று அறுபத்தி நான்கு யட்சனி வகைகளை கூறுகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் பல்லாயிரம் யட்சனிகள் உண்டு

நீங்கள் கூறும் அறுபத்தி நான்கு யட்சனிகளில் பெண்கள் பெயர் தான் முழுமையாக இருக்கிறது. யட்சனிகள் என்பது ஒரு இனம் என்றால்அவற்றில் ஆண்களும் இருக்க வேண்டும் அல்லவா?  ஆண் பெயரே இல்லாததற்கு என்ன காரணம்?

உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும்இன விருத்தி செய்வதற்கு ஆண் - பெண் இணைப்பையே பயன்படுத்துகிறது என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் ஆண் -  பெண் இணைப்பு இல்லாமலே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்களும் உண்டு. உதாரணத்திற்கு மண்புழுவை எடுத்துக்கொள்வோம். இது தன் உடல் பகுதியை இன்னொரு பகுதியாக துண்டித்து கொண்டு வாழும் வல்லமை பெற்றது. இதன் மூலமே அதன் இனப்பெருக்கம் நடைபெறுவதாக படித்திருக்கிறேன். இது தவிர வேறு சில ஒரு செல் உயிரின வகைகளும் இனச்சேர்க்கை இல்லாமலே இனவிருத்தி செய்வதாக அறிகிறோம். இப்படி வித்தியாசமான எத்தனையோ உயிர் வகைகள் இறைவன் படைப்பில் உண்டு.


யட்சனிகளும் அத்தகைய விந்தையான படைப்பே ஆகும். அவர்கள் இனத்தில் ஆண் என்ற இனமே கிடையாது. அனைவருமே பெண்கள் தான். அவர்களுக்கு மரணம் என்பது இல்லை என்பதனால்இனவிருத்தி என்பது அவசியம் இல்லாமல் போய்விட்டது. யட்சர்கள் என்ற ஒரு வகையை அடிக்கடி கூறுவார்கள் இவர்கள் யட்சனிகளின் ஆண் இனமோ என்று பலர் நினைக்கலாம். ஆனால் இவர்கள் யட்சனிகள் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டு மனிதர்களின் சுயத்தேவைகளை பூர்த்தி செய்ய ஒருபோதும் வரமாட்டார்கள். இவர்களது பணி வேறு. யட்சனிகள் அப்படி அல்ல. மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மனிதர்களுக்காக நல்ல காரியங்களையும்தீய கர்மாக்களையும் செய்யக்கூடியவர்கள்.

இந்த யட்சனிகளை எப்படி பார்ப்பதுஅவர்களை எப்படி வசியப்படுத்துவது?

அயனவெளியில் மந்திரங்கள் என்ற சப்த லயங்கள்பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த லயங்களுக்கு ஏற்ற மந்திர அதிர்வுகளை மனிதர்களாகிய நாம் எழுப்பினால்அதாவது மந்திர பீஜங்களை உருவேற்றினால் எந்த நேரத்தில் அயனவெளி மந்திரமும்நமது மந்திரமும் ஒரே அலைவரிசையில் பயணப்பட்டு சந்திக்கிறதோ அதையே மந்திர சித்தி என்கிறோம். யட்சனிகளுக்கான அவர்களை பார்க்கும்வசியப்படுத்துவதற்கான தனித்தனி மந்திரங்கள் உண்டு. அந்த மந்திரங்களை முறைப்படி உருவேற்றினால் குறிப்பிட்ட யட்சனியின் சந்த லயத்தோடு நமது மந்திர அதிர்வு இணையும் போது யட்சனிகளின் தரிசனத்தை பெறமுடிகிறது.

பார்ப்பது மட்டுமல்லஅவற்றோடு பேசவும் நம்மால் முடியும். நம்முடைய அருகாமையும்அன்பும் அவைகளுக்கு பிடித்து விட்டால் எப்போதும் நம்மோடு இருப்பதாகவும்நமக்கு ஒத்தாசை செய்வதாகவும் சத்திய பிரமாணம் செய்து கொடுக்கும். அதை தான் யட்சனிகளின் வசியம் என்று சொல்கிறோம். ஒவ்வொரு யட்சனிக்கும் தனித்தனி மந்திரங்கள் உண்டு. தனித்தனி பிரயோக முறைகளும் உண்டு. அவற்றை முறைப்படி செய்தால் ஆர்வம் உள்ள எவருக்கும் வெற்றி கிடைக்கும்.


உங்களிடம் யட்சனிகள் வசப்பட்டது உண்டாஅதற்கான மந்திரங்கள் தெரியுமா?

யட்சனிகளை வசப்படுத்தவில்லை என்றால் அவர்களை பற்றிய விபரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. நான் இதுவரை கூறி வந்த யட்சனி பற்றிய தகவல் அனைத்தும் புத்தகங்களில் படித்தோகுருமார்களிடம் கேட்டறிந்ததோ அல்ல. யட்சனிகளிடம் தானாக பெற்ற அனுபவத்தின் விளைவுகளே. மந்திரங்கள் தெரியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். மந்திரங்கள் தெரியாமல் அவற்றை வசப்படுத்தவும் முடியாது. அந்த மந்திரங்களை பிறருக்கு உபதேசிக்கவும் முடியாது. நானும் நிறைய பேருக்கு அவற்றை உபதேசித்து இருக்கிறேன்.


உங்களிடம் மந்திர தீட்சை எடுத்துக்கொண்ட அனைவரும் யட்சனி வசியத்தில் வெற்றி பெற்றார்களா?

அனைவரும் வென்றார்கள் என்று என்னால் கூற முடியாது. ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வந்து பாதியில் விட்டவர்களும் உண்டு. மன ஒருநிலைப்பாடு இல்லாமல் பலவருடங்கள் செய்தும் வெற்றி பெறாமல் போனவர்களும் உண்டு. இந்தமாதிரி வித்தைகளை கற்றுக்கொள்ள வெறும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. நிதானம் வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அருளால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வேண்டும். அப்படி வென்றவர்கள் பலரும் என் மாணவர்களாக இன்றும் இருந்து வருகிறார்கள்.

நீங்கள் கூறுவதை வைத்துப்பார்த்தால் யட்சனிகள் என்பது பெண்தெய்வ சக்திகள் என்பது புரிகிறது. இவர்களை வசியப்படுத்தும் மந்திரங்களைஆண்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியுமாஅதாவது மனித ஜாதியில் உள்ள பெண்கள்யட்சனி மந்திரங்களை பயன்படுத்த முடியாதாயட்சனிகளை வசப்படுத்தி வைத்து கொண்டால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறப்படுகிறதே அதுவும் உண்மையா?

யட்சனிகள் என்பது பெண்தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் ஒருபடி தெளிவாக கூறுவது என்றால்சிவபெருமானுக்கு எப்படி பூதகணங்கள் சேவை செய்கின்றதோ அதே போன்றே யட்சனிகள் அம்பாளுக்கு சேவை செய்யும் சக்திகள். இந்த சக்திகளை ஆண்கள் மட்டும் தான் மந்திர ஜபம் செய்து சித்தி படுத்தலாம் பெண்களால் அது இயலாது என்று எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் தீட்டு காலம் என்பது மந்திர ஜபம் செய்ய சற்று இடைஞ்சலாக வரும். அதாவது ஒரு மண்டலகாலம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால் அதில் ஐந்து நாட்கள் தெய்வ காரியங்களை விலக்கி வைக்கவேண்டிய நிலை பெண்களுக்கு உண்டு.

அதனால் தான் பலர் பெண்கள் தீட்டு பருவம் கடந்த பிறகு மந்திரதீட்சை பெறவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆர்வம் உள்ள பல பெண்கள் இதன் மூலம் அதிகமான பாதிப்பை சந்திக்கிறார்கள். ஒரு காலத்திற்கு பிறகு தான் ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் எனும் போது தேவையற்ற கால விரயம் ஏற்படும்மனநிலையில் மாறுதல் வரும்வாழ்க்கை சூழல் கூட மாறிவிடலாம். பிறகு காலம் முழுவதும் நினைத்ததை செய்ய முடியாமலே போய்விடும் என்று பல பெண்கள் கருதுகிறார்கள் என்னை பொறுத்தவரை இது தேவையற்ற எண்ணம் என்று நான் கூறுவேன் ஐந்து நாட்கள் அவர்கள் செய்யக்கூடாது என்றால் அந்த ஐந்து நாட்கள் பொறுத்திருந்துவிட்டு விட்டு ஆறாவது நாள் செய்யலாமே ஐந்து நாட்கள் மட்டும் தானே கூடும். ஆகவே யட்சனி பயிற்சிகள் மட்டுமல்ல வேறு எந்த பயிற்சியையும் தடையில்லாமல் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவை சேர்ந்த பெண்களுக்கே மந்திரங்களை கற்றுக்கொள்ள ஆயிரம் தடைகளை நாம் போடுகிறோம். அவர்களுக்குரிய உடல் உபாதைகளை காரணம் காட்டி வாய்ப்புகளை தட்டி பறிக்கிறோம். நிச்சயம் இது சாஸ்திர விரோதமான காரியம். மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஒரு பெண்மணி மந்திர தீட்சை எடுத்து கொள்ள என்னிடம் வந்தார் அப்போது அவர் என்னிடம் பெண்கள் மந்திரங்களை கற்கலாமாகுறிப்பாக வெள்ளைக்கார பெண்களுக்கு கற்று கொடுப்பீர்களாஎன்று கேட்டார். ஆண்களை போன்று பெண்களும் மனித இனம் தானே அவர்கள் கற்றுக்கொள்வதற்கு என்ன தடை இருக்கிறது என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன். நான் அதற்காக கேட்கவில்லை. எனக்கு மந்திர தீட்சை தருவதற்கு அரைமனதோடு சம்மதித்தீர்களா முழுமனதோடு சம்மதித்தீர்களா என்பதை அறிந்து கொள்ளவே கேட்டேன் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறி என்னிடம் தீட்சை பெற்று சென்றார். இன்று யட்சனி வசியத்தில் வெற்றி பெற்று கர்ண யட்சனி என்ற சக்தியோடு வெற்றிகரமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்.


உங்கள் அடுத்த கேள்வி யட்சனிகளை வசியப்படுத்துவதனால் குடும்பம் கெட்டு விடுமாகுடும்பத்தில் அனைவரின் வாழ்க்கைத்தரமும் கீழ்நிலைக்கு போய்விடுமாஎன்பது தானே?

யட்சனிகளை வசியப்படுத்தினாலும் சரிவேறு எந்த தெய்வ சக்திகளை வசியப்படுத்தினாலும் அவைகளை வைத்து நல்ல காரியம் செய்தால் பத்து பேருக்கு உதவி ஒத்தாசையாக இருந்தால் வழி தெரியாதவனுக்கு வழிகாட்டினால் என்றுமே கெடுதி வராது. மாறாக மற்றவர்களிடம் இல்லாத சக்தி என்னிடம் இருக்கிறது என்ற ஆணவத்தில் அநியாயம் செய்தால் அநீதிக்கு துணைபோனால் கண்டிப்பாக யார் தடுத்தாலும் கெடுதி வந்தே தீரும். இதில் மாற்றம் இல்லை.

யட்சனிகளை வசப்படுத்துவதனால் என்ன பயனை பெறலாம்

மனிதப்பிறவியின் மிக முக்கிய நோக்கமே இறைவனின் பாதங்களில் ஐக்கியம் அடைவது தான். அப்படி ஐக்கியம் அடைய பல ரகசிய முறைகள் உண்டு. அவற்றை நல்ல யட்சனிகளின் மூலம் கற்றுக்கொள்ளலாம். யட்சனிகளின் துணை கொண்டு குறி சொல்லலாம் என்பது கடைசி தரம். அவைகள் நமது எதிர்காலத்தையும் குறிப்பிடும். மற்றவர்களின் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் வழிகளையும் கூறும். மிக குறைந்தபட்சமாக ஒரு தொழிலை நாம் துவங்கி நடத்தி கொண்டிருக்கும் போது அதில் நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக்கொள்ளும் மார்க்கத்தை யட்சனிகள் முன்கூட்டியே காட்டி விடும். தொழில்பங்காளிகளில் நல்லவர்கள் யார்கெட்டவர் யார்என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒன்றில் முதலீடு செய்வதற்கு முன்பு லாபம் வருமாநஷ்டம் வருமாஎன்பதையும் அறிந்து கொள்ளலாம். பங்கு சந்தை முதலீட்டில் யட்சனிகளின் வழிகாட்டுதல்கள் இருந்தால் கோடிகோடியாக சம்பாதிக்கிறோமோ இல்லையோ முதலீட்டை இழக்காமல் பார்த்து கொள்ளலாம். யட்சனி வசியத்தை முறைப்படி கற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் எந்த காலத்திலும் பணத்தட்டுப்பாட்டோடு வாழ்ந்ததை நான் பார்த்தது இல்லை இப்படி எத்தனையோ உபயோகங்கள் மனித குலத்திற்கு யட்சனிகள் செய்கின்றன. அதை நாம் தான் சரிவர பயன்படுத்தி கொள்வது கிடையாது.



 யட்சனி தீட்சை பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்


மேலும் தெரிந்து கொள்ள வீடியோ 




நில பிரச்சனையை தீர்த்த மந்திர தீட்சை !



     குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். ஐந்து வருடமாக வீடு கட்டத் துவங்கி, முடிக்க முடியாமல் தவித்துக்  கொண்டிருந்தேன். உங்களிடம் அமிர்ததாரா மகா மந்திர தீட்சை பெற்று, எப்படியும் வீட்டை கட்டி முடிக்க வேண்டும். அதற்கு இறைவன் துணை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் மந்திரத்தை உறுதியுடன் ஜெபித்து வந்தேன். சென்ற வாரம் மீண்டும், வீடு கட்டும் பணியை துவக்கி விட்டேன். உங்கள் அருளாலும், ஆசிர்வாதத்தாலும் வீட்டு வேலை நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யவும்.

இப்படிக்கு,
துரைசாமி,
வாசுதேவநல்லூர்.


     குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்டு, இரண்டு வருடங்கள் போராடி வந்தேன். உங்களிடம் தீட்சை பெற்ற பிறகு, கடன் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அமைந்து, இன்று முதல் பங்கு கடன் வந்துவிட்டது. மகிழ்வோடு வீடு கட்ட துவங்க போகிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை.

இப்படிக்கு,
லூர்து மரியான்,
தூத்துக்குடி.


    குருஜி அவர்களுக்கு, வணக்கம். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பூர்விக இடங்கள் பலகாலமாக பாகப்பிரிவினை செய்யப்படாமல் இருந்தது. அமிர்ததாரா மஹாமந்திர தீட்சை எடுத்த பிறகு, பாகப்பிரிவினைக்கு சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஒத்துக்கொண்டு, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி இருக்கிறோம். எங்கள் காரியம் நல்லபடி நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள்.

இப்படிக்கு,
ஜெயராஜ்,
நாகர்கோவில்.


    குருஜி ஐயா வணக்கம். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். ஒரு வருடமாக வாங்கி போட்ட நிலங்கள் எதுவும் விற்பனை ஆகாமல், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். நீங்கள் தரும் மந்திர தீட்சை அறிந்து, அதை நம்பிக்கையோடு பெற்றுக்கொண்டேன். இப்போது சில இடங்கள் விற்பனையாக துவங்கி இருப்பது எனக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. வாழ்வளித்த உங்களுக்கு எத்தனைமுறை நன்றி கூறினாலும் போதாது.

இப்படிக்கு,
மாரியப்பன்,
கோபிச்செட்டிபாளையம்.


(பயன்பெற்றவர்களின் அனுபவ கடிதங்கள் இன்னும் தொடரும்...)



  அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும்  தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம். கடிதம் அனுப்ப -  sriramanandaguruji@gmail.com







ஆசையை நிறைவேற்றிய அமிர்ததாரா !



     ஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். நானும் உங்களைப் போன்ற வாசகர்களில் ஒருத்தி தான். எனக்கு, இந்த இணையதளத்தை படித்ததன் மூலம் கிடைத்த நம்பிக்கையும், குருஜியிடம் தனிப்பட்ட வகையில் நான் பெற்ற தீட்சையின் மூலம் கிடைத்த பலனையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப்பட்டு இந்த கடிதம் எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

நான் தென்மாவட்டத்தை சேர்ந்தவள். எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு திருமணம் முடித்து கொடுப்பது என்றால் மிகப்பெரிய கஷ்டம். காரணம், பெண் படித்திருக்கிறாளா? அறிவுடையவளாக இருக்கிறாளா? நல்ல குணவதியா? குடும்பத்தை அரவணைத்து நடத்துவாளா? என்பதை எல்லாம் பார்ப்பதை விட நிறைய நகை போட்டு வருவாளா? ஐம்பது பவுன், நூறுபவுன் என்று கொண்டுவருவாளா?  லட்சக்கணக்கில் வரதட்சணை பணம் கிடைக்குமா? என்பதை தான் பார்ப்பார்கள் கஷ்டப்பட்டு உயர்ந்த படிப்பை பெண்ணுக்கு கொடுத்தாலும், குறைந்தபட்சம் அறுபது பவுன் போடமுடியவில்லை என்றால், திருமணம் நடத்துவது பெரிய சிரமம்.

எங்கள் பகுதி பெண்களும், தமிழ்நாட்டில் மற்றபகுதி பெண்களை விட நகைகளின் மீது மிக அதிகமாக ஆசை கொண்டவர்கள். அடுத்த வேளை சாதம் வடிக்க அரிசி இருக்கிறதா என்று நினைப்பதை விட, காது, மூக்கில் புதியதாக போட்டுக்கொள்ள நகை இல்லையே என்று நினைத்து கவலைப்படுபவர்கள் தான் அதிகம். நானும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண பெண் தான். திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த போது, நகைக்காக நான் கண்ட கனவுகள் அதிகம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, எட்டுமணி வரை உட்கார்ந்து பீடி சுற்றுவேன். அதன்பிறகு அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்வேன். அங்கேயும் பாடம் இல்லாத ஓய்வு நேரத்தில், டப்பாவில் கொண்டுசென்ற பீடி தூளை வைத்து வேலை செய்வேன். வீட்டுக்கு வந்தபிறகும் இரவு பதினொரு மணி வரை பீடி சுற்றுவேன்.

இது தவிர சீட்டுபோட்டு பணம் சேர்ப்பது சின்ன சின்ன பொருட்களை வாங்கி, விற்று லாபம் சம்பாதிப்பது என்று சம்பாத்தியத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வேன். நம்பினால் நம்புங்கள். திருமணத்திற்கு முன்பு, என் சொந்த சம்பாத்தியத்தில் பத்துசவரன் நகை வாங்கி வைத்திருந்தேன். என் அப்பா நஞ்சை நிலத்தை விற்று மேலும் இருபத்தி ஐந்து சவரன் நகை போட்டு, ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்து, எனக்கு திருமணம் செய்து வைத்தார். என் கணவர் B.Com., வரையிலும் படித்திருந்தாலும், வேலைக்கு போகாமல், சென்னையில் சொந்தமாக மளிகைக்கடை நடத்தினார். நல்ல வியாபாரம் நடந்தது. அதில் வருகின்ற லாபத்தை வைத்தும் நகைகளை வாங்கினேன்.

மளிகைக்கடை நடத்துவதை விட, பழைய இரும்புக்கடை நடத்தினால் அதிகலாபம் சம்பாதிக்கலாம் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் கூறிய அறிவுரையை ஏற்று சென்னை ராமாபுரத்தில் பழைய இரும்புக்கடை துவங்கினோம். ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் மிக நன்றாகவே தொழில் நடந்தது. கடையில் ஐந்து வேலைகாரர்கள். சென்னையில் சொந்த வீடு என்று வசதிகள் அதிகரித்தது. எப்படியாவது கஷ்டப்பட்டு கார் ஒன்று வாங்கிவிட வேண்டுமென்று என் வீட்டுகாரர் மிகவும் ஆசைப்பட்டார். எனக்கும் கார் மீது ஆசையும், கனவும் வளர்ந்தது. சாதரணமான ஒரு பெண்ணுக்கு இருக்கும் நியாயமான ஆசை எனக்கும் இருந்ததில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் யாரையும் கெடுக்க நினைக்கவில்லை. சம்பாதித்து முன்னேற நினைத்தோம். ஆனால், இது சில மனிதர்களுக்கு பிடிக்கவில்லை.

திருட்டு பொருட்களை வாங்குகிறோம் என்று, போலியான புகார்களை எங்கள் மீது கொடுத்து, நிறைய போலீஸ் கேஸ்களை நாங்கள் சந்திக்கும்படி செய்துவிட்டார்கள். ஒருபுறம் போலீஸ் தொல்லை, இன்னொருபுறம் எதிரிகளால் தொல்லை. கோர்ட் கேஸ், லஞ்சம் கொடுத்தல் என்று பல வகையிலும் எங்கள் பணம் பறந்து போனது. வீட்டை விற்றோம். கையில் வைத்திருந்த சேமிப்பு பணங்களை இழந்தோம். கழுத்தில் உள்ள தாலி தவிர அனைத்து நகைகளையும் அடகு வைத்தோம். அதன்பிறகு முற்றிலுமாக விற்றும் விட்டோம். நகை மீது ஆசை கொண்ட எனக்கு பித்து பிடித்தது போல ஆகிவிட்டது. பல இரவுகள் உறக்கம் இல்லாமல் அழுதேன்.

என் கணவர் என்னை தேற்றுவார். குடித்து அழிக்கவில்லை. தவறான வழியில் போகவில்லை. என்றாவது ஒருநாள் நம்மால் சம்பாதிக்க முடியும், பழையபடியும் உயர முடியும். நீ கவலைப்படாதே என்று என்னை ஆறுதல் படுத்துவார். என் தாய் - தந்தையரும் அவர்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்தார்கள். இந்த நேரத்தில் வெளியில் சென்று விட்டு வந்த என் கணவர் மீது ஆட்டோ ஒன்று மோதியது. சரியாக இடுப்பில் அடிபட்டதனால் மிகவும் பாதிப்பு அடைந்துவிட்டார். நிறைய கடன்வாங்கினேன். யார் யாரிடம் எல்லாமோ கையேந்தினேன். கடைசியில் எதுவும் இல்லாத சூழலில் என் திருமாங்கல்யத்தை விற்று கணவருக்கு வைத்தியம் பார்த்தேன். அவர் மட்டும் எழுந்துவிட்டால் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன்.

என் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். படிக்கும் பருவத்திலேயே பணம் சேர்த்து நகை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்த நான், சம்பாதித்து கைநிறைய பணம் வரும்போது எவ்வளவு நகைகளை வாங்கியிருப்பேன். எப்படியெல்லாம் என் ஆசை கனவுகள் ஓங்கி இருக்கும். அத்தனை ஆசை இருந்தும். இறுதியில் மாங்கல்யம் கூட தங்கம் இல்லாமல் வெறும் மஞ்சள் கயிறாக ஆகிப்போன பிறகு, நான் எப்படி உடைந்து போயிருப்பேன். அந்த துயரத்தை என்னால் எழுத முடியவில்லை. நகைக்காக ஒரு பெண் இத்தனை ஏங்குவாளா என்று நிறையப்பேர் யோசித்திருக்கலாம். மோகம் பிடித்தவள் இவளென்று திட்டியும் இருக்கலாம்.

நல்லவேளை என் கணவர் ஆறுமாதத்தில் பழையபடி நன்றாக நடமாட துவங்கிவிட்டார். அவரால் தனியாக வியாபாரத்தை கவனிக்க முடியாது என்பதனால், நானும் அவருக்கு உதவியாக வேலை செய்தேன். இந்த நேரத்தில் தான் குருஜி அவர்கள் காசு தரும் மந்திரம் என்ற தலைப்பில் பதிவை வெளியிட்டு அமிர்ததாரா மஹா மந்திர தீட்சையை பற்றி எழுதி இருந்தார். இதை என் தொலைபேசியில் படித்தேன். அவரது வார்த்தைகள் எனக்கு ஆறுதலை மட்டும் தரவில்லை. புதிய நம்பிக்கையை தந்தது. மனிதரால் ஆகாத காரியம், தெய்வத்தால் ஆகும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். குருஜியின் வார்த்தைகள் எனக்கு தெய்வத்தின் வார்த்தைகளாக பட்டது.

என் குறைகளை எதுவுமே குருஜியிடம் கூறாமல், மந்திர தீட்சை எடுத்து கொண்டேன். பசியாக இருந்தவளுக்கு அறுசுவை உணவு கிடைத்தது போல, குருஜி கொடுத்த மந்திரத்தை ஆர்வத்தோடு சொல்லி வந்தேன். சில நாட்களில் அந்த மந்திரம் என் இரத்தத்தில் கலந்து விட்டது என்றே சொல்லலாம். தூங்கும் நேரத்தை தவிர, எல்லா நேரத்திலும் மந்திரம் என்னையும் அறியாமல் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வெளிச்சத்தை நோக்கி முன்னேறுவது போல, நானும் மந்திரத்தை உறுதியாக பிடித்துக்கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் எனக்கு பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நகைகள் வாங்கமுடியவில்லை என்றாலும் கவலை இல்லை. மந்திர தீட்சையால் நான் எப்போதும் பெறாத மன நிம்மதியை மன நிறைவை இப்போது பெற்றிருக்கிறேன் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனாலும் என் வேகம் அதிகரித்தது.

இந்த நேரத்தில், என் கணவருக்கு தொழிலில் ஒரு சிறிய லாபம் ஏற்பட்டு எனக்கு கால் சவரனில் மாங்கல்யம் வாங்கி தந்தார். நூறு சவரன் நகை கிடைத்தாலும் கூட எனக்கு வராத சந்தோஷமும், ஆனந்த கொண்டாட்டமும் அப்போது வந்தது. அதற்கு முன்பு ஆனந்த கண்ணீரை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். என் கணவர் தந்த மாங்கல்யத்தை தொட்டு பார்த்த போது தான் அந்த ஆனந்த கண்ணீர் எப்படி இருக்கும் என்பது எனக்கு புரிந்தது. இந்த சந்தோஷத்தை இந்த புதிய நம்பிக்கையை எனக்கு தந்தது. குருஜி கொடுத்த மந்திர தீட்சை நான் அவரை நன்றியோடு வணங்கினேன். பக்தியோடு போற்றினேன். நான்பெற்ற இன்பத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

அமிர்ததாரா மஹா மந்திரம் பாலைவன பயணிக்கு, தாகத்திற்கு தண்ணீர் தருவது போல, முதலில் நம்பிக்கை தருகிறது. பிறகு, சாந்தி தருகிறது. அதன்பிறகு முயற்சியில் வேகம் தருகிறது. முடிவில் பலனை கைமேல் தருகிறது. இதை என் அனுபவம் வாயிலாக உணர்ந்து கொண்டேன். இனி எனக்கு நகை மீது மோகம் வருகிறதோ இல்லையோ? நான் முன்னேறிவிடுவேன். பலருக்கும், பயனுள்ள நிழலாக வளர்ந்து விடுவேன். என்னாலும் பத்துபேருக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவிற்கு உழைக்க முடியும், உயர முடியும் என்ற நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தருகிறது. குருஜியின் அருளால் நிச்சயம் ஜெயிப்பேன்.

இப்படிக்கு,
முத்துலட்சுமி,
இராமாபுரம்.

(அமிர்ததாரா மகாமந்திர தீட்சையின் மூலம் நன்மைகளை பெறுகின்ற சகோதரி முத்துலஷ்மி போன்றோர்களுக்கு குருஜியின் ஆசிர்வாதம் எப்போதும் தொடரும்)


  அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும்  தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம்.







Next Post Home
 
Copyright © . பயிற்சி